Saturday 27 June 2009

தினமணி-சந்திரன் சொல்லத் தவறியது-இந்திராவின் சாதுரியம்.



இலங்கை வரலாற்றை எழுதிவரும் பாவை சந்திரன் அவர்கள் ஜனதா விமுக்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் புரட்சி பற்றி எழுதும் போது இந்திராகாந்தி அரசின் சாதுரியமான செயல் ஒன்றை குறிப்பிட மறந்துவிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஒரு சராசரிச் சிங்களவரைப் போலவே ரோஹண விஜயவீர ஒரு இந்திய எதிர்ப்பாளர். அவர் தனது புரட்சியைப் பரப்புவதற்கு சிங்கள மக்களிடை இருந்த இந்திய எதிர்ப்பை நன்கு பயன் படுத்தினார். அவரது கொள்கைப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதி இந்திய விரிவாக்கம் என்பதை அடிப்படையாகக் கொண்டது.

  • ஒரு நாள் இந்தியன்கள் இலங்கைக்கு நடந்து வருவாங்கள் என்று சொல்வார்.
  • ஒரு புளிய மரம் தனது நிழலில் இன்னொரு மரத்தை வளர விடாது அதுபோலவே இந்தியாவும் இலங்கையை உருப்படவிடாது.
  • இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடல்ல அது குண்டூசியிலிருந்து விமானம் வரை தயாரிக்கிறது.
    இப்படிப் பல இந்தியப் பூச்சாண்டி.

இந்திரா காந்தி அம்மையார் மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளை தனது உளவுத்துறை மூலம் நன்கு கவனித்து வந்தார். இலங்கையிலும் பார்க்க இந்தியா அதன் நடவடிக்கைகள் பற்றி நன்கு அறிந்திருந்தது. மக்கள் விடுதலை முன்னணி ஆயுதப் புரட்சி தொடங்குவதற்கு இரு நாட்களுக்கு முன்னதாக இந்தியா வெளிநாட்டமைச்சு தமது கடற்படைக் கப்பல் ஒன்று உங்கள் நாட்டுக்கு அண்மையில் பழுதடைந்து விட்டது உங்கள் கொழும்புத் துறை முகத்தில் நுழைய அனுமதி வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டமைச்சிடம் அனுமதி கேட்டுப் பெற்று கொழும்பில் ஒரு கடற்படைக் கப்பல் வந்துவிட்டது. அதே பாணியில் மறுநாள் இன்னொரு கப்பலும் வந்துவிட்டது. இரு கப்பல்கள் நிறைய கூர்க்காப் படையினர் தயார் நிலையில்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுதப் புரட்சி தொடங்கியது இலங்கை அதிகாரிகள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநயக்காவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால் அவர் சொகுசுப் படமாளிகை ஒன்றில் ஆங்கிலப் படம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். இதற்குள் நாட்டின் சிலபாகங்கள் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள். உதவிக்கு சிறிமாவோ இந்திரா காந்தியைத் தொடர்பு கொண்டார். இந்திரா அம்மையார் சொன்னார் "ஆம் பிரச்சனை இல்லை எங்கள் இரு கப்பல்கள் நிறைய வீரர்கள் கொழும்புத் துறைமுகத்தில் நிற்கிறார்கள்." பின்னர் இந்தியாவிலிருந்து ஒரு தொகை உலங்கு வானூர்திகளும் இலங்கை வந்தன.

Friday 26 June 2009

தினமணியில் பாவை சந்திரன் சொல்லாமல் விட்டது - தமிழர்களைப் பிரித்த நேரு



தினமணியில் இலங்கைத் தமிழர் வரலாற்றை எழுதிவரும் பாவை சந்திரன் அவ்வப்போது சில் விடயங்களை சொல்லாமல் விடுவதுண்டு. எல்லாவற்றையும் எழுத முடியாததுதான். ஆனால் சில முக்கிய நிகழ்வுகள் மறைகப் படக் கூடாது.

தமிழர்களைப் பிரித்த நேரு
இலங்கையில் வாழ் தமிழர்களை இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் என்று ஆங்கிலேயர் பிரித்து வைத்தனர். கொழும்பில் வாழ்ந்த வியாபாரித் தமிழர்கள் தம்மை கொழும்புச் செட்டி என்ற தனி இனமாக்கினர். பிரிந்திருக்கும் தமிழர்களை தமிழ் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் ஒன்றிணக்க முற்பட்டார். அவர் தனது காங்கிரசையும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் தலைவராக இருந்த ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இயங்கிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் ஒன்றிணைக்க முற்பட்டார். ஆ. தொண்டமான் இது தொடர்பாக அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் இது தொடர்பாக ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு தொண்டமானைப் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துழக்குமாறு பணித்தார். தொண்டமானும் அதன்படியே செய்தார். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு இது உள்நாட்டு விவகாரம் என்று பகிரங்கமாகச் சொல்லித் தட்டிக் கழித்தார்.

அழியும் அந்த வட நாட்டுப் பேய்கள் வாழ்வான் தமிழன்


சைனீஸ் சாப்பாட்டுக் கடையில்
இத்தாலியன் உணவையும்
ருசிக்க முடியவில்லை.
..
விம்பிள்டனில் விளையாடும்
பெண்ணின் ஆடை விலகுவதையும்
ரசிக்க முடியவில்லை.
.
பிக்ஸி லொட் பாடும்
மமா டு வையும் கேட்டு
அனுபவிக்க முடியவில்லை.
.
கூட வேலை செய்யும் பெண்
அருகில் வந்து உரசி நிற்பதையும்
உணர முடியவில்லை.
.
படுத்தால் தூக்கமில்லை
பசியும் எடுப்பதில்லை
எல்லாமே இழந்தோமோ
எல்லாமே முடிந்ததோ
என்ற பயம் மனமெங்கும்.
.விடியுமென்று நம்பியிருந்த வேளை
முடிந்தாதோ என்ற பயம்
காப்போம் எனக் கூறிய கவர்
எதிரிகளோடு நின்றழித்தனரே.
.
இனி வருமொரு
அணு ஆயுதப் போர்
எம் எதிரியரிடையே
அழியும் அந்த
வட நாட்டுப் பேய்கள்
வாழ்வான் தமிழன்
தரணியெங்கும் நிம்மதியாக

Thursday 25 June 2009

இலங்கையில் ஆசியாவும் மேற்குலகும் – பலப் பரீட்சையில் ஆசியா வென்றதா?


இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் நடந்தது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான பலப்பரீட்சையா? இப் பலப் பரீட்சையில் கிழக்கு வென்று மேற்கு தோற்றதா? சீனாவும் இந்தியாவும் இணைந்தால் மேற்கை வெல்லலாமா? சீனவினது இந்தியாவினதும் வளர்ச்சியின் விளைவா இது? இது தொடர்பான புள்ளி விபரங்களும் தகவல்களும் என்ன?
...
முதலாவது விடயம் ஜப்பான் கிழக்கு நாடுதான் அது மேற்கு நாடுகளுடன் இணைந்து நிற்கிறது. ஜப்பானை இந்த விடயத்தில் மேற்கோடும் சேர்க்கமல் விடலாம் ஆனால் கிழக்கோடு சேர்க்க முடியாது.
...
வருமானம்
உலக சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட கிழக்கு உலக வருமானத்தில் மூன்றில் ஒன்றை மட்டுமே பெறுகிறது.
ஆசியாவின் சராசரித் தனிநபர் வரு மனம் $5,800 இது மேற்குலகைப் பொறுத்தவரை $48,000. எட்டு மடங்குக்கு மேல். ஆசிய நாடுகளின் தற்போதைய பொருளாதார வளர்சியின் படி போய்க் கொண்டிருந்தாற் கூட ஆசியா அமெரிக்கவின் தனி நபர் வருமான நிலையை எட்ட 77 வருடங்கள் எடுக்கும். இந்த நிலையை இந்தியா அடைய 123 வருடங்கள் எடுக்கும். சீனாவிற்கு 47 வருடங்கள் எடுக்கும்.
......
பதுகாப்புச் செலவீனம்
ஆசிய நாடுகளின் மொத்த பாதுகாப்புச் செலவீனம் அமெரிக்கவின் பாதுகாப்புச் செலவீனத்தின் மூன்றில் ஒரு பகுதியிலும் குறைவு! ஆசிய நாடுகளின் பாது காப்புச் செலவீனம் அமெரிக்கவின் செலவீனத்திற்கு நிகராக வர இன்னும் 72 வருடங்கள் எடுக்கும்.
...
மேற்குலக நாடுகள் ஒன்று தனது அயல் நாட்டின் எல்லையில் சண்டை பிடிப்பதற்கான சூழ் நிலையில் இல்லை. இந்தியாவும் சீனாவும், இந்தியாவும் பாக்கிஸ்த்தானும், சீனாவும் தைவானும், வட கொரியாவும் தென் கொரியாவும் எல்லைகளில் மோதல் சூழ் நிலைகள் நிலவுகின்றது.
...
இருந்தும் ஐநாவில் சீனாவும் இந்தியாவும்
அநியாயத்திற்கு வென்றது எப்படி?
பிரித்தானியாவும் பிரான்சும் மட்டுமே இதில் அக்கறை எடுத்தன. மற்ற நாடுகள் குறிப்பாக அமெரிக்கா இதில் பெரிதாக அக்கறை எடுக்கவில்லை. ஆபிரிக்க நாடுகள் இந்தியாவுடனும் சீனாவுடனும் சேர்ந்து வாக்களித்தன.
...
இது எங்க ஏரியா உள்ளே வராதே!
இலங்கையில் மேற்குலகின் பிடியிலும் பார்க்க சீனாவின் பிடி இறுகியது எப்படி? மேற்குலக நாடுகள் இந்திரா காந்தி அம்மையார் பிரதம மந்திரியாக இருந்தபோது இலங்கை இந்தியாவின் வல்லாதிக்கத்திற்கு உட்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டன. இலங்கைக்கு பயங்கரமான ஆயுத உதவிகளைச் செய்வதை மேற்குலக நாடுகள் தவிர்த்துக் கொண்டன. இதைப் பயன்படுத்தி சீனா இலங்கைக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி தன் பிடியை இறுக்கிக் கொண்டது. இந்தியா தனது போரை நடாத்தத் தேவையான ஆயுதங்களை வழங்கியது.

Wednesday 24 June 2009

இலங்கையின் மனித உரிமை மீறல்களை இந்தியா தூண்டியதா?


இலங்கைக்கு அனைத்துலக நாணய நிதியம் வழங்கவிருந்த கடன் தாமதமாகிக் கொண்டு வருகிறது. நாணய நிதியம் விதிக்கும் நிபந்தனைகள் ஆளும் கட்சிக்கு பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும். நாணய நிதியம் நிபந்தனைகளின் ஒன்று ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராகக் குறைக்கப் படவேண்டும்என்பது. இதன்படி ஒரு டொலர் 122 ரூபா என்ற விகிதத்தில் வரவேண்டும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அந்த யோசனையை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. நாணய நிதியம் இந்த நிபந்தனையை விதிப்பது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான தண்டனையாகவே கருதப்படுகிறது.
.
சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
.
அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
.
உலக நாடுகளில் 169வது இடத்தில் இருக்கும் இந்தியா
இந்தியா இந்த உதவியை வழங்க முன்வருவதன் காரணம் என்ன? அன்னியச் செலவாணியை பொறுத்தவரை சீனா முதலாம் இடத்திலும் இந்தியா 169வது இடத்திலும் இருக்கிறது. அன்னியச் செலவணிக்குத் திண்டாடும் இந்தியா ஏன் இந்த உதவியைச் செய்ய முன்வருகிறது? மஹிந்த ராஜபக்சே சொன்னார் தாம் இந்தியாவின் போரைச் செய்து முடித்ததாக. அண்மையில் விடுதலைப் புலி உறுப்பினர் கூறியது: வட்டுவாய்க்கால் தாண்டும் போது வரவேற்றவர்களில் நான் ஒரு சீக்கிய இந்திய தளபதியைக் கண்டேன். இலங்கைப் போரில் இந்தியா மறைமுகமாக தீவிர ஈடுபாடு காட்டியது. எப்படிப் போர் நடக்கவேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை இந்தியா வழங்கியது. மனித உரிமைகளை மீறாமல் இந்தப் போரில் இலங்கையால் வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்தியாவின் ஆலோசனையின் பேரில் இலங்கை மனித உரிமைகளை மீறியதா? அதற்கான இழப்பீடுதான் இந்தியா வழங்கப் போகும் இந்தக் கடன் உதவியா?

Tuesday 23 June 2009

மானம் கெடும் ஐநா செயலர் பான் கீ மூன்


ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் திரு பான் கீ மூன் அவர்கள் பத்திரிகைகளின் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.

இவர் ஐநா செயலராகப் பதவி ஏற்றபோது இவரைப் பற்றி வந்த கருத்துக்கள்:
  • முப்பது வருடங்களின் பின் ஐநா செயலராகப் பதவி ஏற்கும் ஆசியர்.
  • 13ம் திகதி ஜூன் மாதம் 1944இல் Chungju, Korea வில்பிறந்தவர்.
  • பன்னாட்டு உறவுகள் தொடர்பான படிப்பில் பட்டம் பெற்றவர்.
  • கொரியாவின் வெளிநாட்டமைச்சர்.
அவர் தன்னைப் பற்றிச் சொன்னவை:
  • ஒத்துப் போகச் செய்பவன், சமப் படுத்துபவன், நடுநிலையாளன்.
  • வெளியில் சாதுவாகத் தென்பட்டாலும் தேவையான நேரத்தில் மன உறுதியுடன் செய்ற்படுபவன்.
  • போரின் சாம்பலில் இருந்து எழுந்த கொரியாவச் சேர்ந்தவன்
நேர்மையற்ற பான் கீ மூன்.
The Economist சஞ்சிகை அதிகாரத்திற்கு உண்மையாயிருத்தல் என்ற அம்சத்தில் இவருக்கு பத்திற்கு மூன்று புள்ளிகளை மட்டும் வழங்கியது. இதற்கு அப் பத்திரிகை கூறிய காரணம் இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடாத்திய போரில் அவர் நடந்து கொண்டவிதம். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது அவர் தன்க்கு இலங்கை செல்ல நேரமில்லை என்று தட்டிக் கழித்தார். போர் முடிந்த பின் அங்கு போனார். இது தொடர்பாக அவர்டம் ஒரு பத்திரிகையாளர் என்ன போர் வெற்றி விழாவில் பங்கேற்கப் போகிறீர்களா என்று ஏளனமாகக் கேட்டார்!
Financial Times என்ற பத்திரிகையும் இவர் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக நடந்து கொண்டவிதத்தை தாக்கி எழுதி இருந்தது.
.
ஐநா ஊழியர்களுடன் முரண்பாடு
ஐநா ஊழியர் சங்கத்துடன் பான் கீ மூனுக்கு நல்ல உறவு இல்லை. இவர் செய்த சில நியமனங்களால் உறவு பாதிக்கப் பட்டது. இது தொடர்பாக வந்த கருத்து:

Ban apponted former peacekeeping chief Jean Marie Guehenno as his Under Secretary General
for Regional Cooperation, that is on all these groups. Then, Ban did no assign Guehenna a single
peice of work. It was a patronage appointment, apparently designed to keep Guehenno's visa status. This is not a new way of doing business.
.
தட்டிக் கழிக்கப் பட்ட தமிழர் விவகாரம்.
இலங்கையில் தமிழ்ர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்டபோது அது தொடர்பான பல கேள்விகளை பான் கீ மூனும் அவரது உதவியாளர்க்ளும் தட்டிக் கழித்தனர். முக்கியமாக விஜய் நம்பியாரின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் வழங்கப் படவில்லை.
.
பான் மிகப் பயங்கரமான கொரிய நாட்டவர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு ஊடகம் பான் கீ மூனை மிகப் பயங்கரமான கொரிய நாட்டவர் என்று வர்ணித்துள்ளது. அது தொடர்ந்தும் கூறுகையில்:

Not for him bold speeches or attempts to mobilize public opinion behind what could be an organization that helps tackle nuclear proliferation or reconstruct Afghanistan. Not for him championing human rights, or even rallying in defense of beleaguered civilians. Visiting Malta in April for yet another honorary degree, he was evasive when asked about the island's penchant for sending illegal African immigrants packing off to Italy, saying, "I am not in a position to intervene." As tens of thousands of Tamil refugees lingered under fire on a narrow strip of beach in Sri Lanka, Ban and his advisors did little more than huddle in New York and wring their hands, only making a trip to the war zone after hostilities ended. Under his stewardship, the United Nations isn't merely an unhelpful place—it's a largely irrelevant one.

தமிழர்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப் பட்டுக்கொண்டிருக்கும் போது இவரும் இவரது ஆலோசகர்களும் நியூயொர்க் நகரில் கட்டியணைத்துக் கொள்வதைத் தவிர மேலதிகமாக ஒன்றும் செய்ய வில்லை என்று கிண்டலடித்ததோடு நிற்காமல் இவரது வழிகாட்டலின் கீழ் ஐநா என்பது உதவாத இடமும் தேவையற்ற இடமும் ஆக இருக்கிறது என்கிறது அந்த ஊடகம்.

Sunday 21 June 2009

வன்னியின் அவலங்கள் இலண்டன் தெருக்களில்...







இலண்டலில் தமிர்கள் நடத்திய பேரணியில் வன்னியில் நடக்கும் அவலங்களை சித்தரித்துக் காட்டினர்.

காணொளியில் இலண்டன் பேரணி

வன்னி யுத்தத்தில் காணாமல் போயுள்ளவர்கள் மீட்கப்பட வேண்டும், முகாம்களில் வாழும் மக்கள் இயல்பு நிலை வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும், இனப்படுகொலையை நிகழ்த்தியோரும் அதனை மூடிமறைப்போரும் நீதியின் முன்நிறுத்தப்படவேண்டும், எனும் மூன்றம்சக் கோரிக்கைகளை முன் வைத்து, பிரித்தானியாவில் நேற்று புலம் பெயர் தமிழர்களால் மாபெரும் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...