Saturday 21 July 2012

சிரிய அதிபர் அசாத்தின் பலான பகிடிகள்

மக்கள் கிளர்ச்சியை தன் இரும்புக் கரங்களால் அடக்கிக் கொண்டிருக்கும் பிரித்தானியாவில் மருத்துவம் படித்த சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பலான பகிடிகளை தனது நண்பகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புவாராம். இதை விக்கிலீக் அம்பலப்படுத்தியுள்ளது. அவர் அனுப்பிய சில பகிடிகள்:

HAPPINESS
To be happy with a man, you must understand him a lot and love him a lot.
To be happy with a woman, you must love her a lot and not try to understand her at all.

LONGEVITY
Married men live longer than single men do,
but married men are a lot more willing to die.

ROMANCE MATHEMATICS:
Smart man + smart woman = romance
Smart man+dumb woman = affair
Dumb man+smart woman = marriage
Dumb man+dumb woman = pregnancy

OFFICE ARITHMETIC

Smart boss+smart employee = profit
Smart boss+dumb employee = production
Dumb boss+smart employee = promotion
Dumb boss+dumb employee = overtime

SHOPPING MATH

A man will pay $200 for a$100 item he needs.
A woman will pay$100 for a $200 item that she doesn't need.

GENERAL EQUATIONS & STATISTICS

A woman worries about the future until she gets a husband.
A man never worries about the future until he gets a wife.
A successful man is one who makes more money than his wife can spend.
A successful woman is one who can find such a man.


PROPENSITY TO CHANGE

A woman marries a man expecting he will change, but he doesn't.
A man marries a woman expecting that she won't change, and she does.

DISCUSSION TECHNIQUE
A woman has the last word in any argument.
Anything a man says after that is the beginning of a new argument.

HOW TO STOP PEOPLE FROM BUGGING YOU ABOUT GETTING MARRIED

Old aunts used to come up to me at weddings, poking me in the ribs and cackling,
telling me, 'You're next.'
They stopped after I started doing the same thing to them at funerals.

On December 15, 2010 in an email titled "British generosity", Bashar al-Assad transferred an email which was sent to him by Fawaz Akhras, his father-in-law, according to Owni, in which he mocks international aid sent by the British after an “earthquake” which killed 2 million people in Pakistan.

Subject: British generosity

It is said that a big earthquake hit Pakistan.
Two million Pakistanis died and over a million are injured.
The country is ruined and the government doesn't know where to start to rebuild.
The world is in shock.
The USA is sending troops to help.
Saudi Arabia is sending oil.
Latin American countries are sending supplies.
New Zealand is sending sheep, cattle and food crops.
TheEastAsiansare sending labour to assist in rebuilding infrastructure.
Australia is sending medical teams and supplies.
Not to be outdone,
Britainis sending back two million Pakistanis as replacements.
. .
God Bless British generosity.

Four days later, on December 19, 2010, Assad sends another joke of a nun who has been raped and goes to her head nun for help.

“I was raped. What shall I do?”
"Drink this most bitter tea with no sugar"
“Shall that bring my purity and honour back?”
"No, but it shall take that happy look off your face”

Attached to yet another email, on November 2010, Assad sends "The Hormone Guide", that men “should memorise”. In the title the Syrian leader advises his interlocutor to “put a copy one the fridge”. The document explains to men how to avoid problems with women.

Friday 20 July 2012

ராகுல் மொக்கை காந்தி தயாராம். இந்தியா தயாரா?

ராகுல் காந்தி பிறக்கும் போதே அவர் இந்தியாவின் பிரதமர் என்று இந்தியார்களின் தலையில் எழுதப்பட்டுவிட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் ராகுல் ஓர் உருப்படியான பேட்டி கூட பத்திரிகைக்களுக்கு கொடுத்ததில்லை. இந்திய அரசில் ஓர் உருப்படியான பதவி வகித்ததில்லை. பாராளமன்றத்தில் ஓர் உருப்படியான உரை நிகழ்த்தியதில்லை. ஆனால் இவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரி.

தகுதிமிகு காந்தி
திக்கெங்கும் ஏழைகள் வீடுகளுக்குச் சென்று உண்ணுவதை தனது பொழுது போக்காகக் கொண்ட ராகுல் காந்திக்கு அடுத்த பிரதம மந்திரியாவதற்கான அத்தனை தகுதிகளும் இருக்கின்றன என்கிறார் சோனியாவின் செல்லப் பிராணிகளில் ஒன்றான திக் விஜய சிங். Bastard children உருவாக்குவதில் வல்லவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட நேருவின் குலக்கொழுந்து ராகுல். பல்கலைக் கழகத்தில் பயிலும் போது விரிவுரையாளரின் அறையில் இருந்து பிடிபட்டதால் பல்கலைக் கழகத்தில் இருந்து ரவீந்திர நாத் தாகூரால் விரட்டப்பட்டவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திரா காந்தியின் பேரன் ராகுல் காந்தி. போபர்ஸ் பீரங்கி புகழ் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி. இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்ல உதவி செய்தார் எனக் குற்றம் சாட்டப்படும் சோனியா காந்தியின் வயிற்றில் உதித்தவர் ராகுல் காந்தி. இதை விட வேறு என்ன தகுதிகள் வேண்டும் இந்தியாவை ஆள?

மக்களாட்சிக் கேலிக் கூத்து ராகுல் காந்தி
இந்தியாவின் ஆட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பதா இல்லையா என்பதை ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும் என்று 18-ம் திகதி அம்மா சோனியா பேட்டியளித்து இருந்தார். ராகுல் முக்கிய பதவி வகிக்க வேண்டுமா இல்லையா என்பதை இந்திய மக்கள் முடிவு செய்யத் தேவையில்லை. காங்கிரசுக் கட்சியும் முடிவு செய்யத் தேவையில்லை. ராகுல் முடிவு செய்யட்டும். இந்தியாவை ஆள காங்கிரசுக் கட்சியை விட்டால் வேறு கட்சியில்லை. காங்கிரசுக் கட்சியை ஆள் காந்தி பெயரைத் திருடி தன் குடும்பப் பெயராக்கிய கான் குடும்பத்தை விட்டால் வேறு எவருமில்லை. காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக கட்சி உறுப்பினர்களால் ராகுல் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாயாரால் முடி சூட்டப்பட்டார். தாயாரின் வேண்டுதலை ஏற்ற ராகுல் கட்சித் தலைமை முடிவு செய்யட்டும் என்றார். யார் அந்தக் கட்சித் தலைமை கட்சியின் தலைவர் அம்மா சோனியா. பொதுச் செயலாளர் மகன் ராகுல். இந்த குடும்ப ஆதிக்கம் தான் உலகிலேயே அதிகம் படித்த பிரதம அமைச்சரையும் உலகிலேயே திறமையான நிதி அமைச்சரையும் கொண்டுள்ள இந்தியா பொருளாதாரத்தில் உடுப்படாமல் இருப்பதற்குக் காரணம்.

பாதை திறந்த ராகுல் காந்தி
காங்கிரசுக் கட்சியில் ஓரளவிற்கு முதுகெலும்புள்ளவர் பிரணாப் முஹர்ஜீ. அவர் இருக்கும் வரை ராகுல் காந்தி இந்தியாவின் பிரதம மந்திரி ஆக முடியாது அதனால் பிரணாப்பை ராஸ்ரபதி பவனுக்கு அனுப்பி ராகுல் முன்னுக்கு வருவதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. பிரணாப்பின் வெற்றி நிச்சயம் என்றவுடன் அம்மா ராகுல் ஆட்சியில் பங்கு வகிப்பதைப் பற்றி முடிவு செய்யட்டும் என்றார். ஆனால் அம்மா சோனியவிடம் ஒரு பெரும் பயம் உண்டு. பிரணாப் முகர்ஜீயின் பிரதம மந்திரிக் கனவை சிதைத்தவர் ராஜீவ் காந்தி. ராஜீவ் தன் மந்திரி சபையில் கூட பிரணாப்பிற்கு இடம் கொடுக்கவில்லை. அந்தப் பழியை இந்தியக் குடியரசுத் தலைவராகிய பின்னர் தீர்த்துக் கொள்வாரா என்ற அச்சம் சோனியாவிடம் இன்றும் உள்ளது.


சாதித்துக் காட்டிய ராகுல் காந்தி
2004 மார்ச் மாதத்தில் இருந்து அமேதி தொகுதிக்கான பாராளமன்ற உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி அந்த தொகுதியை முன்னேற்ற எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுத்ததில்லை. இந்தியாவின் பிந்தங்கிய தொகுதிகளில் ஒன்றாக அது இருந்து வருகிறது. 2008இல் காங்கிரசின் இளைஞர் அமைப்பின் செயலாளராக ராகுல் நியமிக்கப்பட்ட போது தான் இளைஞரணியைச் சீர் திருத்தப் போவதாக அறிவித்தார். அதாவது இளைஞர் அணிக்குள் வாரிசு அரசியலை ஒழிக்கப் போவதாகச் சூளுரைத்தார் ஆனால் அவரால் அதைச்  செய்ய முடியவில்லை. 2012 மார்ச் மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் ராகுல் தீவிர பிரச்சாரம் செய்த இடமெல்லாம் அவரது குடும்பச் சொத்தாகக் கருதப்படும் காங்கிரசுக் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது.

நாணயக் கடத்தல் காந்தி?
27-09-2001-ம் திகதி அமெரிக்க லோகன் விமான நிலையத்தில் இரண்டு மில்லியன் டாலர்கள் கொண்ட பயணப்பையுடன் ராகுல் காந்தியும் அவரது அப்போதைய காதலி வெரோணிக்காவுடன் பிடிபட்டாராம். வெரோணிக்கா ஒரு கொலம்பிய போதைப் பொருள் வியாபாரியின் மகள். சோனியா அப்போதைய பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பேயியைத் தொடர்பு கொண்டு ராகுல் காந்தியை மீட்டாராம். அதன் பின்னர் ராகுல் அமெரிக்காப் பக்கம் தலைகாட்டியதில்லை.


பாதுகாப்பு அமைச்சர் ராகுல் காந்தி
ஆட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்க முன்வரும் ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. உலக படைக்கலன் சந்தையில் அதிக பணம் செலவிடும் நாடு இந்தியா. ராகுலின் சுவிஸ் வங்கிக்கணக்கிற்கு இந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி பெரிதும் உதவும்.


ராகுல் கடைசிக் காந்தி
ராகுல் காந்திக்கு என்று ஒரு தொலை நோக்கு கிடையாது. இந்தியப் பாது காப்புப் பற்றியோ வெளி நாட்டுக் கொள்கை பற்றியோ அல்லது இந்தியப் பொருளாதரம் பற்றிய அறிவோ அல்லது இந்தியாவை எந்தத் திசையில் கொண்டு செல்வதென்ற கொள்கையோ கிடையாது. இது வரை ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்காததிற்கு முக்கிய காரணம் அவரது மொக்கை அமபலமாகி விடும் என்றுதான். ராகுல் பிரதம மந்திரியான பின்னர் அவர் அடிக்கவிருக்கும் கூத்துக்கள் இந்தியாவை பலதுறையிலும் மோசமாக்கும். அதன் பின்னர் காந்தி குடும்பத்தில் எவரும் இந்தியாவை ஆள முடியாது.  இதற்கு இந்தியர்கள் தயாராக வேண்டும்.

Thursday 19 July 2012

கருணாநிதியின் டெசோ குரங்கா பிள்ளையாரா?

1970களின் முற்பகுதியில் ஈழப்போராட்டத்தின் முன்னோடிகள் அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து தாம் தொடங்கவிருக்கும் படைக்கலங்கள் ஏந்திய போராட்டத்திற்கு ஆதரவு தரும்படி கேட்டனர். தன்னை ஒரு தமிழ்ச்சிங்கம் என்று மக்கள் நினைக்க வேண்டும் என்று விரும்பும் கருணாநிதி அந்த இளைஞர்களின் கோரிக்கையைக் கேட்டு கலங்கிப் போனார். உரையாடலின் போது நாவன்மை மிக்க அவரது குரல் தழு தழுக்கத் தொடங்கிவிட்டதாம். அந்த இளைஞர்கள் வெறும் கையோடுதான் திரும்பினர். பின்னர் 1980களின் முற்பகுதியில் இலங்கையில் அமெரிக்கா தனது ஆதிக்கக் கால்களை ஊன்றவிருப்பதைத் தடுக்க தமிழ் ஈழப் போராளிகளைப் பயன்படுத்த புதுடில்லி திட்டமிட்டபோது புதுடில்லியின் வேண்டுதலின் பேரிலேயே கருணாநிதி ஈழப் போராளிகளுக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கினார். புதுடில்லி கருணாநிதி எம்ஜி ராமச்சந்திரன் ஆகியோரிடையான போட்டியை ஈழப் போராளிக் குழுக்களிடையான முறுகலை வளர்க்க நன்கு பாவித்துக் கொண்டது.

டெசோவின் ஆரம்பம்
டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவு அமைப்பு 1985இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. டெசோவைப் புகழ்ந்து பேசும் திரவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி டெசோ செய்த இரண்டு சாதனைகளைக் குறிப்பிடுகிறார். ஒன்று அண்டன் பாலசிங்கமும் செல்வநாயகம் சந்திரகாசனும் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டமையை தடுத்து நிறுத்தியமை. மற்றது 1985-இல் அன்றைய ஆந்திர முதல்வர் என் டி ராமாராவ், வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்), எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்), பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல் ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங் எம்.பி, இந்துஸ்தான் முன்னணி சார்பாக சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸாம் கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி, க.அன்பழகன், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, என்டிஆர், வாஜ்பாஸ் ஆகிய பிரபலமானவர்களையும் முன்னணி அமைப்புக்களையும் கொண்ட ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்தமை. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர் மத்திய அரசிற்குப் பயந்து டெசோ அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டது. 2012 ஏப்ரல் 25-ம் திகதி கருணாநிதி டெசோ அமைப்பின் மாநாடு விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5-ம் திகதி நடக்கும் என்று அறிவித்தார்.  பின்னர் டெசோ மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 12-ம் திகதி நடக்கும் என்று அறிவித்தார்.

கருணாநிதிமீது கடும் கண்டனக் கணைகள்
டெசோ மாநாடு கூட்டுவதற்கான அறிவிப்பு விட முன்னர் கருணாநிதி தான் இறப்பதற்கு முன்னர் ஈழம் அமைவதை விரும்புகிறேன் என்றும் தனது நிறைவேறாத கனவு ஈழம்தான் என்றும் கூறியிருந்தார். டெசோ மாநாட்டில் இலங்கையில் ஈழம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பை ஐக்கிய நாடுகள் சபை நடத்த இந்திய அரசு முயற்ச்சிகள் மேற் கொள்ள வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். இலங்கையில் இறுதிப் போரின் போது மக்கள் ஆயிரக்கணக்கில் தினசரி கொல்லப்பட்ட போது மானாட மயிலாட நடத்திக் கொண்டிருந்த கருணாநிதி இப்போது ஏன் மாநாடு நடாத்தத் துடிக்கிறார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் பெருகி வரும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவைச் சிதைக்க கருணாநிதியும் இந்திய மத்திய அரசும் இணைந்து சதி செய்கின்றன என்றும் கூறப்பட்டது. அது மட்டுமல்ல டெசோ மாநாட்டை ஜெயலலிதா மூலம் மத்திய அரசு குழப்பி ஜெயலலிதாவிற்கு தமிழின உணர்வாளர்களிடை வெறுப்பை வளர்க்கச் சதி செய்யப்படுகிறது எனவும் கூறப்பட்டது. ஈழப்பிரச்சனையை அடிப்படையாக வைத்து காங்கிரசுக் கட்சியில் இருந்து வெளியேறிய தமிழருவி மணியன் "ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி தமது பதவிக் காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒரு போதும் சிந்தித்தது இல்லை. இப்போதும் உலகத் தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள் மூலம் மிகச் சிறந்த குழப்பவாதி என்பதை கருணாநிதி நிரூபித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுகவின் துரோகத்தால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைத்தால், இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஈழத்தமிழர்கள் குறித்து பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் நன்மையாகும்" என்றார்.


2011-இல் நடந்த சட்ட சபைத் தேர்தல்
ஈழத் தமிழர்களின் விரோதியான கன்னடத்து பார்பனப் பெண்ணான ஜெயலலிதா முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழ்நாட்டில் எழுந்துள்ள ஈழ ஆதரவு அலையை நன்கு புரிந்து கொண்டும் தமிழ்நாட்டில் பெரும் கட்சிகளிடை ஈழ ஆதரவு இடைவெளியை நன்கு புரிந்து கொண்டும் ஈழத் தமிழர்கள் தொடர்பான தனது கொள்கையை  மாற்றிக் கொண்டார். அதனால் 2011இல் நடந்த சட்ட சபைத் தேர்தலில் பெரு வெற்றியும் ஈட்டினார். 2ஜி அலைக்கற்றை வழக்கில் மாட்டிய மகள் கனிமொழி பதவிப் போட்டியில் மோதிக் கொள்ளும் மகன்கள் அழகிரியும் ஸ்டாலினும் காங்கிரசுடனான உறவில் விரிசல், திமுகாவைப் பிடிக்காத அடுத்த பிரதமர் ராகுல் காந்தி இப்படி பல பிரச்சனைகளால் தனது குடும்பத்தின் எதிர்காலம் பற்றி கலங்கி நிற்கும் கருணாநிதிக்கு ஓர் ஊன்று கோல் அவசியம் தேவைப்படுகிறது. இந்த ஊன்று கோல்தான் ஈழ ஆதரவு நாடகமா? இந்தியாவில் கட்சிகளிடையிலான கூட்டணி தர்மத்தை நிர்ணயிப்பது கட்சிகளின் கொள்கைகள் அல்ல. கட்சித்தலைவர்களின் ஊழல்கள் தொடர்பாக உளவுத் துறையினரிடம் இருக்கும் கோப்புக்களே கூட்டணி தர்மத்தை நிர்ணயிக்கின்றன.

சிவ் சங்கர் மேனனும் சுற்றறிக்கையும்
ஜுன் 29-ம் திகதி கொழும்பு சென்ற  சிவ் சங்கர் மேனனிடம் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஈழ ஆதரவு நிலைப்பாடுபற்றி எடுத்துக் கூறப்பட்டது. கொழுபின் கைக்கூலிகள் போல் செயற்படும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் உடனடியாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்போர் மீது கடும் நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அது மட்டுமன்றி இம்முறை விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் அறிக்கையில் தமிழருக்கு என தனிநாட்டை (தமிழீழம்) உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு வாக்கு வேட்டைக்காக இலங்கைத் தமிழர்கள் தொடர்ப்பாக எந்தவித விட்டுக் கொடுப்பும் செய்யப் போவதில்லை என்னும் நிலைப்பட்டில் சோனியா காந்தி மிகவும் உறுதியாக உள்ளார் என்பதை இவை எடுத்துக் காட்டுகிறது. சோனியாவின் காங்கிரசும் திமுகாவும் 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தோல்வியைச் சந்தித்தாலும் வெற்றி பெறும் ஜெயலலிதாவின் கட்சிக்கு அல்லது அதன் உறுப்பினர்களுக்கு சில பதவிகளைக் காட்டி காங்கிரசின் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

வில்லன் கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம்

2009மே மாத நடுப்பகுதியில் இந்தியப் பாராளமன்றப் பொதுத்தேர்தல் பிரச்சாரமும் இலங்கை இறுதிப் போரும் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. இலங்கையில் நடந்த போரின் கடைசி நாட்களில் விடுதலைப் புலிகளும் இலட்சக் கணக்கான பொது மக்களும் ஒரு சிறுபகுதிக்குள் முடக்கப்பட்டு நாற்புறமும் சிங்களப்படைகளும் சூழ்ந்துள்ள நிலையில் இலங்கை அரச படைகளால் கனரக படைக்கலன்கள் பாவிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு புறம் இருக்கும் சிங்களப் படையினர் ஏவும் கனரகப் படைக்கலன்கள் மற்றப்புறம் இருக்கும் சிங்களப்படையினர் மீது விழும். இக்கட்டதில் சிங்களப்படையினருக்கு ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்த இந்தியப் படை வல்லுனரும் புதுடில்லியில் இருக்கும் சதிகாரர்களும் கோபாலபுரத்தினரும் சேர்ந்து ஒரு சதித் திட்டம் தீட்டினர். அதன்படி கருணாநிதி போர் நிறுத்தம் வேண்டி ஒரு உண்ணாவிரதம் இருப்பது என்றும் அப்போது இலங்கை அரசு தாம் இனி கனரக படைக்கலன்கள் பாவிப்பதில்லை என அறிவித்தனர். அதை கருணாநிதியின் ஊடகங்கள் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்வதாக திரித்துப் பிரச்சாரம் செய்தன. தேர்தல் மேடைகள் யாவிலும் கருணாநிதி இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தி விட்டார் என்று முழங்கப்பட்டது. ஆனாலும் இலங்கை விமானப் படைகள் தொடர்ந்து குண்டுகள் வீசிக் கொண்டிருந்தன. அதுபற்றி கருணாநிதியிடம் கேட்டபோது மழை விட்டு விட்டது தூவானம் விடவில்லை என்றார். இந்த உண்ணாவிரத நாடகமும் வாய்ச்சவாடலும் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் கருணாநிதியின் மீது மாற்ற முடியாத வெறுப்பை உருவாக்கி விட்டன,

கருணாநிதியின் ஆடித் தள்ளுபடி - சிதம்பர இரகசியம்

கருணாநிதி டெசோ மாநாடு நடத்துவதாக அறிவித்ததமையைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ப சிதம்பரம் அவரை சிஐடி காலானி வீட்டில் சந்தித்தார். பின்னர் கருணாநிதி டெசோ மாநாடு தனி ஈழத்திற்கானது அல்ல அது தமிழர்களின் பிரச்சனைகளை அடிப்படையாக வைத்தே என்றார். சிதம்பரம் சோனியாவின் மிரட்டலைக் கருணாநிதியிட்டம் தெரிவித்தபடியால் கருணாநிதி டெசோ மாநாட்டில் இருந்து தனி ஈழ ஆதரவை தள்ளுபடி செய்துவிட்டார் என செய்திகள் வந்தன. ஆனால் கருணாநிதி தன்னுடன் சிதம்பரம் ஈழம் பற்றிப் பேசவில்லை என்றார். அப்பட்டமான பொய்களை வாய் கூசாமல் பேசுபவர்தான் கருணாநிதி என ஏற்கனவே வை கோபாலசாமி கூறியிருந்தார். ஈழம் இல்லாத டெசோ மாநாடு திருமணம் நடக்கும் ஆனால் முதலிரவு கிடையவே கிடையாது என்பது போன்றது.

மிண்டும் வாய்ச் சவாடல்
கருணாநிதி இப்போது கூறுவது "இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற வேண்டும். ஆயுதப் போராட்டத்திற்குப் பின், எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைந்திட, அறவழியில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தான், சென்னையில் நடத்தப்போகும் மாநாட்டின் திட்டமாகவும், தீர்மானமாகவும் இருக்கும்.தனித் தமிழ் ஈழம் வேண்டும்; அதுவும் இன்றைக்கே வேண்டும். அதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று சொன்னால், உடனே, இவர் இப்படிச் சொன்னதால் தான், இலங்கைத் தமிழர்கள் அடிபட்டு சாக வேண்டி இருக்கிறது. அவர்களின் அழிவுக்கு இவர் தான் காரணம் என்பர். முதலில் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய துன்பங்கள் தீர வேண்டுமென்றும், மற்றவற்றைப் பற்றி நேரம் பார்த்து சிந்தித்துச் செயல்படலாம் என்றும் சொன்னால், பார்த்தீர்களா, தமிழ் ஈழம் கொள்கையையே விட்டு விட்டார் என்பர்.தமிழ் ஈழத்தைக் கருணாநிதி விட்டு விட்டார் என்றெல்லாம் கற்பனை உலகத்தில் சஞ்சரிப்பார்களானால், அவர்கள் அப்படியே சஞ்சரிக்கட்டும். நாம் நம் வழியிலே நடப்போம். இதிலே ஒன்றும் குழப்பம் இல்லை".

70,000 - பொய்யன் பிரணாப் முஹர்ஜீ
இலங்கையில் இறுதிப் போரின் போது போர் முனையில் அகப்பட்டிருப்பவர்கள் எழுபதினாயிரம் மட்டுமே எனப் பொய் சொன்னவனும் இலங்கையில் போரை நிறுத்த முடியாது என்று சொன்னவனும் ஆகிய பிரணாப் முஹர்ஜீயை இந்தியக் குடியரசுத் தேர்தலில் ஆதரிக்கும் கருணாநிதி செம்மொழி மாநாட்டை ஆரம்பித்து வைத்தது போல் டெசோ மாநாட்டையும் ஆரம்பித்து வைக்கச் செய்ய முடியுமா?

தமிழர்களுக்குத் தேவை டெசோ அல்ல

தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒன்று கூடி இந்திய மைய அரசில் காத்திரமான பங்காளிகளாக மாறி குடும்ப நலன்கள் பதவி மோகங்களைத் துறந்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சையும் வெளியுறவுத் துறை அமைச்சையும் கைப்பற்றி இலங்கை தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்ற வேண்டும். அல்லது ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒன்று கூடி காங்கிரசுக் கட்சியினதும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களினதும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மாற்ற வேண்டும். வெறும் கூக்குரல்கள், கூட்டங்கள், மாநாடுகள், கொட்டும் மழையில் கைகோர்த்து நிற்றல், ஏன் தீக்குளித்தல் கூட ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க உதவாது. இந்திய அரசின் கொள்கைகளை மாற்றாமல் எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க முடியாது. அவர்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்த முடியாது. அவர்களுக்கு போரினால் ஏற்பட்ட இன்னல்களைக் களைந்திட முடியாது.

Wednesday 18 July 2012

மொழி பெயர்த்த நகைச்சுவைகள்: பலான நூறு டாலர்கள்

தொலைபேசியில் முகத்தில் நகக் கீறல்களுடன் ஒரு அப்பாவிக்கணவன்: "யெஸ் மா நான் உங்க சொல்லைக் கேளாமல் இவளைத் திருமணம் செய்தது பெரிய தப்புத்தான். நீங்கள் சொன்னது போலே அவ ஒரு பத்திரகாளிதான். ஒரு சின்ன விசயத்தையும் பெரிதாக்கி சண்டை போடுகிறாள். தினசரி அடிபிடிதான். உங்க அறிவுரையைக் கேட்காமல் இவளைத் திருமணம் செய்ததால் இப்போது நன்றாக அனுபவிக்கிறேன். என்னது நீங்க இவளோடு பேசப் போகிறீர்களா? டோட்டல் வேஸ்ற். அவ உங்க சொல் கேட்க மாட்டா. சரி நீங்க இவளோடு பேச வேண்டும் என்கிறீர்கள். சரி பேசுங்க. ஏய் உன் அம்மா உன்னோடு பேச வேண்டுமாம் இந்தா பேசு."

மகன்: அப்பா ஒரு திருமணத்திற்கு எவ்வளவு செலவாகும்?
தந்தை: இன்னும் நான் கணக்கு முடிக்கவில்லை. இன்றும் செலவழித்துக் கொண்டே இருக்கின்றேன்.

திருமணமாகி முதலிரவிலேயே அவன் விவாக இரத்துச் செய்ய முடிவு செய்துவிட்டான்.  நடந்தது இதுதான். முதலிரவு முடிந்ததும் அவன் பழக்க தோசத்தால் அவளிடம் நூறு டாலர்களைக் கொடுத்தான். அவளும் பழக்க தோசத்தில் மிகுதிப் பணம் என்று சொல்லி இருபதைந்து டாலர்களைக் கொடுத்தாள்.

ஒரு பப்பில்(மதுபான உணவகம்) இருந்து மதுவருந்திக் கொண்டிருந்த ஒரு கவர்ச்சிகரமான பெண்ணை கலாய்ப்பதற்காக அவள் அருகில் சென்று உன்னை இதற்கு முன்னர் எங்கோ சந்தித்ததாக ஞாபகம் என்றான். அதற்கு அவள் கொடுத்த பதில். ஆம் நான் பைத்தியக்காரர் மருத்துவ மனையில் receptionist ஆக வேலை செய்கிறேன் என்றாள்

அந்த முடி திருத்தகத்திற்கு(சலூன்) ஒருவன் நுழைந்து நான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்று வினவினான். அவனுக்கு இன்னும் இரு மணித்தியாலங்கள் என்று பதில் கூறப்பட்டது. அடுத்த நாளும் அவன் வந்து அதே கேள்வி இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் அதே பதில் இன்னும் இரு மணித்தியாலங்கள். அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து சிலநாட்கள் இப்படி நடந்தது. கடைசியில் விசனமடைந்த முடிதிருத்தக உரிமையாளர் தனது உதவியாளாரை அழைத்து இவனைத் தொடர்ந்து சென்று பார் இவன் என்னிடம் இப்படிக் கேட்டுவிட்டு எங்கு போகிறான் என்ன செய்கிறான் என்று. பின் தொடர்ந்து சென்ற உதவியாளர் பின்னர் வந்து சொன்னான் பாஸ் அவன் உங்க வீட்டுக்குள் நுழைந்தான் என்று.

வயிற்றில் பிள்ளை இருக்கும் போது எந்தக் கடவுளைக் கும்பிட்டால் அசிங்கமான பிள்ளை பிறக்கும்?
உன் அம்மாவைக் கேள் சரியான பதில் கிடைக்கும்

Tuesday 17 July 2012

நகைச்சுவைக் கதை: சொர்க்கத்தில் நடந்த திருமணம்

சுகந்தனுக்கு 16 வயது சுமதிக்கு 14 வயது அவர்கள் இருவரும் காதலில் விழுந்து விட்டனர். ஒன்றாகச் சுற்றுவது. கள்ளத்தனமாக பலான படங்கள் பார்ப்பது என்று உல்லாசமாக இருந்தனர். பாவம் அவர்கள். ஒரு நாள் தெருவைக் கடக்கும் போது வாகனத்தில் மோதுண்டு இருவரும் இறந்து விட்டனர்.

விபத்தில் இறந்த சுகந்தனும் சுமதியும் சொர்க்கம் சென்றனர். அங்கு அவர்கள் போனவுடன் முதலில் அவர்கள் தங்களுகுத் திருமணம் செய்து வைக்கும்படி அங்குள்ளவர்களைக் கெஞ்சி மன்றாடினர். அவர்களை சிலகாலம் பொறுத்திருக்கும் படி கட்டளையிடப்பட்டது.

சுகந்தனும் சுமதியும் 15 ஆண்டுகள் பொறுத்திருந்தனர். அவர்களுக்கு ஒரு ஐயர் சைவ முறைப்படி திருமணம் செய்து வைத்தார். அவர்கள் இல் வாழ்க்கை இனிதே போய்க்கொண்டிருந்தது. சொர்க்கத்திற்கு புதிதாக வந்த ஒரு இளம் பெண்ணை சுகந்தன் சைட் அடிக்கத் தொடங்க அவர்கள் இருவருக்கும் இடையில் பெரும் சண்டை மூண்டது. இறுதியில் இருவரும் விவாக இரத்துச் செய்வதாக முடிவு செய்தனர். இருவரும் சொர்க்கத்தில் இருப்பவர்களிடம் தமக்கு விவாக இரத்துச் செய்து வைக்கும் படி மன்றாடினர். "உங்களுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு ஐயர் இங்கு வருவதற்கு நாம் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்போது விவாக இரத்துக் கேட்கிறீர்கள். இங்கு ஒரு சட்ட அறிஞர் ஒரு நாளும் வரப்போவதில்லை. அதனால் உங்களுக்கு விவாக இரத்துச் செய்ய முடியாது" என்று சுகந்தனுக்கும் சுமதிக்கும் பதில் கூறப்பட்டது.

Monday 16 July 2012

தளரும் சீனப் பொருளாதாரம்

மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளினதும் பொருளாதாரங்கள் சரிவடைந்தபோது இந்தியாவினதும் சீனாவினதும் பொருளாதாரங்களின் வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தை தூக்கிவிடும் என்று 2009-2010 இல் நம்பப்பட்டது.

2008-ம் ஆண்டிலிருந்து மேற்கு நாடுகளின் பொருளாதாரங்கள் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்தபோது இந்தியாவும் சீனாவும் ஏறக்குறைய 10% பொருளாதார வளர்ச்சியை எட்டின. 2012இன் முதலாம் காலாண்டில் 8.1% ஆகக் குறைவடைந்த சீனப் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 7.6% ஆகக் குறைவடைந்தமை உலகெங்கும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. 2011இன் கடைசிக் காலாண்டில் இது 8.9%ஆக இருந்தமையும் கவனிக்கத் தக்கது. 2012இல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1990இன் பின் ஏற்பட்ட மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும். 1989இல் தினமன் சதுக்கப் படுகொலைக்குப் பின்னர் பல மேற்கு நாடுகள் சீனாவைப் புறக்கணித்ததால் 1990 சீனப் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தது. சீனா தனது வட்டி வீதத்தை ஜூனில் குறைந்தது. பின்னர் அடுத்த வட்டி வீதக் குறைப்பை ஜூலையில் செய்தமை பல பொருளியல் வல்லுனர்களை திடுக்கிட வைத்தது. வட்டிவீதக் குறைப்பு சீன மக்களை அதிக கடன் பெறச் செய்தாலும் வர்த்தகத் துறையினர் கடன் பெறுவது அதிகரிக்கவில்லை இது சீனப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி வீதக் குறைவைச் சந்திக்கலாம் என அஞ்சவைத்துள்ளது. ஜுன் மாதம் சீனாவின் பணவீக்கம் 2.2% மட்டுமே. இது சீனப் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய வகையில் அளவிற்கு அதிகமாகக் குறைந்துவிட்டது என்று சொல்லலாம். ஆனால் இது சீன அரசு மேலும் வட்டி வீதத்தைக் குறைக்கத் தேவையான இடைவெளியை வழங்கியது. சீனாவின் பொருளாதாரத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டும் இன்னொரு புள்ளிவிபரம் அதன் மின்சாரப்பாவனை.

 சீனாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியமைக்கு இரு காரணங்களைக் கூறலாம். ஒன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்க நாடுகளிலும் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சனைகளால் சீனாவின் ஏற்றுமதி குறைந்தமை. மற்றது அதிகரித்து வரும் வீட்டு விலைகளைக் கட்டுப்படுத்த சீனா எடுத்த நடவடிக்கைகள். சொத்துக்களின் பெறுமதி குறையும் போது வங்கிகள் கடன் வழங்குவது குறையும். அது பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும்.

கடன் பட்டுக் கலங்கும் சீன உள்ளூராட்சிச் சபைகள்
2009இல் ஏற்பட்ட உலகப் பொருளாதரப் பின்னடைவைத் தொடர்ந்து தனது பொருளாதார வளர்ச்சியைத் தூண்ட சீனா 586 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இணையான நாணயப் புழக்கத்தை தனது நாட்டில் சீனா தனது உள்ளூராட்சிச் சபைகளுக்குகடன் வழங்குவது போன்ற பல நடவடிக்கைகளால் அதிகரித்தது. அப்போது கடன் பெற்றவர்கள் ஏற்றுமதிக் குறைவால் பாதிக்கப்பட்டதுடன் கடன் சுமையாலும் தவிக்கின்றனர். வீடுகளின் விலையைக் குறைக்க பல உள்ளூராட்சிச் சபைகள் காணிகளை குறைந்த விலைகளுக்கு மக்களுக்கு விற்றன. இதனால் அவற்றின் சொத்துக்களின் பெறுமதி குறைந்தும் கடன் பளு அதிகரித்தும் உள்ளன.

தப்பி ஓடும் சீனப் பணக்காரர்கள்
சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தபோது உருவான பெரும் செல்வந்தர்கள் சீனாவில் இருந்து வெளியேறி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் குடியேறுகின்றனர். இதனால் சீனாவில் ஆடம்பரப் பொருட்களின் விற்பனை குறைந்து கொண்டு செல்கின்றது. அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சீனர்களின் தொகையும் அரபு வசந்தத்தின் பின்னர் குறைந்து வருகின்றது. கடந்த 12 ஆண்டுகளில் 19,000 சீனர்கள் சட்ட விரோதமாக உழைத்த பணத்துடன் வெளிநாடுகளிற்கு தப்பிச் செல்லும் போது பிடிபட்டுள்ளனர்.

எரிபொருள் விலைகள்
அண்மைக் காலங்களாக அதிகரித்து வந்த எரிபொருள் விலை அதிகரிப்பு சீனப் பொருளாதாரத்தையும் பாதித்தது. தனது பொருளாதாரத்தைத் தூண்டிவிட சினா தனது உள்ளூர் எரிபொருள் விலையை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து குறைத்து வருகிறது. உள் நாட்டில் ஏற்பட்ட எரிபொருள்களுக்கான பாவனை குறைந்தமையால் சீனா தனது பொருளாதாரத்தைத் தூண்டிவிட இந்த எரி பொருள் விலைக் குறைப்பைச் செய்கிறது. சீனாவின் எரிபொருள் பாவனைக் குறைப்பு உலகப் பொருளாதரத்தை இருவகையில் பாதிக்கிறது. ஒன்று உலக எரிபொருள் விலை மேலும் குறையும். மற்றது. சீனாவின் பொருதார வளர்ச்சிக் குறைவு உலகப் பொருளாதாரச் சரிவை மேலும் மோசமாக்கலாம்.

இறுக்கமான கட்டுப்பாடுகள் துல்லியமான திட்டமிடல் போன்றவை சீனப் பொருளாதரம் அண்மைக் காலங்களாக ஈட்டிய பெரு வளர்ச்சியின் முக்கிய காரணிகள். சீன தற்போது எதிர்கொள்ளும் வளர்ச்சிக் குறைவுப் பிரச்சனையில் இருந்து மீள அவை இரண்டும் கைகொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம என்றாலும் சீனாவின் பிரச்சனைகள் அதன் பிரதம மந்திரி சொல்லியது போல் இன்னும் சில ஆண்டுகள் தொடரும்.

பாதுகாப்புச் செலவீனம்
சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரித்து வந்தது. வெளிநாட்டுப் பாதுகாப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த சீனா அண்மைக் காலங்களாக உள்நாட்டுப் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. பொருளாதரப் பிரச்சனையால் சமூகப் பிரச்சனை உருவாகி அது பெரும் கிளர்ச்சியாக மாறாமல் இருக்க சீனா தனது உள்நாட்டுப் பாதுகாப்பிலும் செலவீனத்தைக் கூட்டியது.

Sunday 15 July 2012

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் குட்டை உடைத்த வாஷிங்டன் போஸ்ற்

வாஷிங்டன் போஸ்ற் வெளியிட்ட படம்
அமெரிக்கப் பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ற் ஒரு வாரத்துக்குள் இலங்கை தொடர்பாக மூன்று கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. மூன்று கட்டுரைகளும் பிரபல்யம் பெற்றதுடன் அதிக பின்னூட்டங்களையும் பெற்றுள்ளன.

1. Abuse by Sri Lanka’s army rubs salt in wounds of war, Tamil women say.
2, Sri Lanka plays balancing act between U.S. and Iran.
3. Sri Lanka is descending toward dictatorship, rights activists and opposition leaders say; U.S. is determined to remain engaged.

இலங்கை வல்லரசு நாடுகளின் போட்டி நாடுகளின் போட்டிக் களமாக மாறிவிட்டது என்பதற்கு இந்த மூன்று கட்டுரைகளும் உறுதி செய்கின்றன ஒரு கட்டுரை அதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது:
The Indian Ocean island of Sri Lanka might seem an unlikely cockpit for a game of global power politics, but that is exactly what it has become.

அமெரிக்கா இலங்கை தொடர்பாக இந்தியாவின் வழமையான நிலைப்பாட்டில் இருந்து மாற்றி ஒரு புது நிலைப்பாட்டை இந்தியாவை எடுக்க வைக்க முயல்கிறது. ஆனால் இலங்கையிடம் தொடர்ச்சியாகத் தட்சணை பெற்று இலங்கைக்கு சாதகமாக இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுத்த இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாட்டை மாற்றுவது எளிதல்ல. அது மட்டுமல்ல இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் சாதி வெறியும் வர்ணாச்சிரம தர்மமும் மனுதர்மக் கொள்கையும் இலங்கையில் தமிழர்கள் அடக்கி ஆளப்பட வேண்டிய சூத்திரர்கள் என்ற நிலைப்பாட்டை இலகுவில் மாற்றுவது கடினம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை வாஷிங்டன் சுட்டிக்காட்டத் தவறாத வேளை விடுதலைப் புலிகளை வழமை போல் ஒரு மோசமான பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கிறது.  இலங்கையில் இனக்கொலை இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்தே ஆரம்பித்து விட்டது என்பதை வாஷிங்டன் போஸ்ற் கட்டுரையாளர் சைமன் டினையர் உணரவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதம் 1956இல் தமிழர்களை உயிருடன் எரித்தும் உடமைகளைக் கொள்ளையடித்தும் குழந்தைகளைக் கொதி தாரில் போட்டுக் கொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டதையோ அதன் விளைவாக விடுதலைப் புலிகள் படைக்கலன்கள் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டதையோ கட்டுரையாளர் உணரவில்லை.

இலங்கைக்கு எதிராக பன்னாட்டு மட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்போது அதற்கு எதிரான ஊர்வலங்களில் தமிழர்களை இலங்கைப் படையினர் மிரட்டி பங்கு பெறச் செய்வதை வாஷிங்டன் போஸ்ற் அம்பலப் படுத்தியது.  இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள் கொலைகள் மற்றும் மக்கள் காணாமல் போதல் போன்றவற்றையும் அம்பலப்படுத்துயுள்ளது வாஷிங்டன் போஸ்ற்.

Another woman complained about soldiers turning up in her kitchen and demanding a cup of coffee. “We are scared,” said the mother of six. “More than that, I am frustrated, I am angry. It is a feeling you cannot describe.”

இலங்கைப் படையினர் சமையல் கட்டுக்குள் நுழைந்து காப்பி கேட்கிறார்கள் என ஒரு பெண் கூறியுள்ளார் என்கிறது வாஷிங்டன் போஸ்ற். ஆனால் இலங்கைப் படையினர் ஒரு வீட்டுக்குள் புகுந்து செய்யும் மிகவும் மரியாதையான செயல் காப்பி கேட்பதுதான் என்பதை கட்டுரையாளர் உணரவில்லை.

மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை மூடி மறைத்து வெறும் 40,000 தமிழர்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்கிறது வாஷிங்டன் போஸ்ற்.

தமிழர்கள் ஒருதிறந்த வெளிச் சிறைக்குள் வாழுகிறார்கள் என ஒரு கிருத்துவ பாதிரியார் சொல்லவதை வாஷிங்டன் போஸ்ற் வெளியிட்டுள்லளது:
Tamils feel as if they are living under an army of occupation, said Father S.M. Praveen, who runs the Center for Peace and Reconciliation in the northern town of Jaffna. “It is like an open prison,” he said. “The military decides everything.”Praveen said intimidation has increased since March, when the United States sponsored a U.N. Human Rights Council resolution calling on the Sri Lankans to promote postwar reconciliation. Four of his workers, who were documenting alleged human rights abuses and land grabs by the army, received death threats or were attacked by thugs who threw oil on them, the latest method of intimidating those who criticize the government or army. All four have been forced into hiding, he said.

இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரிப்பதையும் அம்ப்பந்தோட்டையில் சீனா அமைத்த துறைமுகதையும் சுட்டிக்காட்டும் வாஷிங்டன் போஸ்ற் தனது பின்புறத்தில் சீனா ஆதிக்கம் வளர்வதையிட்டு இந்தியா கரிசனை கொண்டுள்ளது என்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் அதிக ஈடுபாடு காட்டுவதற்கான காரணத்தை கட்டுரையாளர் சுட்டிக்க்காட்டுகிறார். போரின் போது முக்கியமானவர்களாக இலங்கையால் கருதப்பட்ட இந்தியாவையும் அமெரிக்காவையும் போர் முடிந்த பின்னர் இலங்கை ஓரம் கட்டுவதாக அமெரிக்காவும் இந்தியாவும் உணர்கின்றன என்கிறார் கட்டுரையாளர். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மீறப்படுவதற்காகவோ தமிழர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்காகவோ அமெரிக்காவும் இந்தியாவும் ஈடுபாடு காட்டவிலை. தாம் ஓரங்கட்டப்படுவதால் அவை இரண்டும் மனித உரிமை மீதும் இலங்கையில் ஒரு நல்லிணக்கம் தேவை என்பது போல் பாசாங்கு செய்கின்றன.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...