Saturday 10 May 2014

என்ன இந்த மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்?

இந்தியப் பொதுத் தேர்தலின் போது சாதி, தனிப்பட்ட தாக்குதல் என்பவற்றுடன் அதிகமாக அடிபட்ட சொற்தொடர் குஜராத் மாடல் பொருளாதாரம் ஆகும். நரேந்திர மோடி தான் முதலமைச்சராக இருந்த போது குஜராத் பொருளாதாரம் பெரு வளர்ச்சி கண்டதாகப் பரப்புரை செய்தார். மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம் என்பது அடானி நிறுவனத்திற்கு ஒரு சதுட மீட்டர் நிலத்தை ஒரு ரூபாவிற்கு விற்பது என காங்கிரசுக் கட்சியினர் பரப்புரை செய்தனர்.

புளுகு மூட்டை என்கின்றார் முலாயம் சிங்
குஜராத் மாடல் வளர்ச்சி என்பது வெறும்  புளுகு மூட்டை. உத்தரப்பிரதேசத்துடன் (உ. பி) ஒப்பிடுகையிலும் எல்லா வகையிலும் குஜராத்  பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. உ.பியை விட குஜராத்தில்தான்  அதிக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டீசல், காஸ்  விலை உயர்வு, வே¬யில்லாத் திண்டாட்டம் குஜராத்தில் அதிகம் இப்படி மோடியின் குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்தார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். இவரின் மகன் உ. பியில் முதலமைச்சராக இருக்கின்றார்.

1960-ம் ஆண்டு உருவாக்கப்பட குஜராத் மாநிலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசுக் கட்சியின் ஆட்சிதான் நடந்தது  1996-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி நடக்கின்றது. குஜராத் மக்கள் கடின உழைப்பாளிகள். அபிவிருத்தி அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்று.

மற்ற மாநிலங்களுடன் குஜராத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா?
 மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு,  குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையுடன் மற்ற மாநிலங்களை ஒப்பிடக் கூடாது என்றாலும். தமிழ்நாடும் குஜராத்தும் மஹாராஸ்ராவிலும் பார்க்க சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளன.
 முன்னணி மாநிலங்களில் குஜராத்தின் தனிநபர் வருமானம் சிறப்பாக இருக்கின்றது.









சிசுக்கள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் மோசமானதாக் இருக்கின்றது







மோடியின் குஜராத்துடன் ஒப்பிடுகையில் நிதிஷ் குமாரின் பிஹார் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. மோடிக்கு முன்னரே குஜராத் ஒரு சிறந்த பொருளாதார வளர்ச்சி  உடைய ஒரு மாநிலமாக இருந்தது.  ஆனால் பிஹார் இந்தியாவில் ஒரு பின் தங்கிய மாநிலமாக இருந்தது. மோடியின் பொருளாதாரக் கொள்கை சந்தைக்கு உகந்ததாக இருக்கின்றது. அதாவது முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்ற பொருளாதார நிர்வாகம் மோடியினுடையது. ஆனால் நிதிஷ் குமாரின் நிர்வாகம் சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கின்றது 1991-ம் ஆண்டிற்கும் 2001-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் பிஹார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக இருந்தது. இதை நிதிஷ் குமார் மூன்று மடங்காக உயர்த்தினார். அதே வேளை ஏற்கனவே ஒரு நல்ல வளர்ச்சி விழுக்காடான 7.5ஐக் கொண்டிருத குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியை மோடி 10.2 ஆக உயர்த்தினார்.  மோடியின் பொருளாதார வளர்ச்சி தேசிய வளர்ச்சியிலும் பார்க்க 1.4 விழுக்காடு மட்டுமே அதிகம் ஆனால் நிதிஷ் குமாரின் பொருளாதார வளர்ச்சி தேசியப் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க 2.5 விழுக்காடு அதிகமாக இருக்கின்றது



நிதிஷ் குமார் ஒரு மதசார்பற்ற முற்போக்கு சிந்தனை உடையவர். இருவரும் பெரிய அளவில் ஊழல் செய்யாதவர்கள் எனச் சொல்லலாம்

மோடியின் இரகசியம் என்ன?
டாட்டா நிறுவனம் தனது சிறிய ரக நனோ கார்களை முதல் மேற்கு வங்கத்தில் உற்பத்தி செய்யத் தொடங்கியது. அங்கு நிலப்பிரச்சனை ஊதியப் பிரச்சனையால் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ரதான் டாட்டவிற்கு மோடி தனது கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் அனுப்பினர்: குஜராத் உங்களை வரவேற்கின்றது என்று. இந்த இரண்டு சொற்களும் குஜராத்திற்கு அதிக அளவில் முதலீடுகளைக் கொண்டு வந்தன. முதலில் டாடா வர அதைத் தொடர்ந்து  போர்ட், பேர்ஜோ, மாருது சுசுக்கி போன்றமுன்னணிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் குஜாராதில் தமது உற்பத்திகளைத் தொடங்கினார். ரதான் டாட்டாவிற்குத் தேவையான காணியை மோடி ஒரு சில தினங்களுக்குள் ஒதுக்கிக் கொடுத்தார். முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை சிவப்புக் கம்பளமே இதுதான் மோடியின் தாரக மந்திரமாக இருந்தது இதுதான் மோடியின் இரகசியம்.மோடி தலைமை அமைச்சராக வரும் வாய்ப்பு உள்ளது என்றவுடன் இந்தியாவிற்கு முதலீடுகள் ஏற்கனவே பாயத் தொடங்கிவிட்டன. இந்திய ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியப் பங்குச் சந்தைச் சுட்டேண் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

மோடியின் பொருளாதார ஆலோசகராக  அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அரவிந்த பரகாரியா அமர்த்தப் படலாம என எதிர் பார்க்கப்படுகின்றது.

மோடி தனது பொருளாதாரக் கொள்கைக்கும் முகாமைத்த்துவத்திற்கும் முன்னாள் பிரித்தானியத் தலைமை அமைச்சர் மார்கரெட் தட்சரையும் முன்னாள் சிங்கப்பூர் தலைமை அமைச்சர் லீ குவான்யூவையும் கொள்கின்றார். மோடி தட்சர் போல் ஒரு மோசமான வலதுசாரியாகத் திகழ்வரா என்பது ஒரு பெரும் கேள்வியாகும். ஆனால் மோடி குஜராத்தில் செய்த பல பொருளாதாரத் திட்டங்கள் மத்திய தர வர்க்கத்தினரின் நலன்களை மையப்படுத்தியதாகவே இருந்தன.

இந்தியாவில் மாநில அரசின் முகாமை வேறு மைய அரசின் முகாமை வேறு. உலகிலேயே மோசமான சிவப்பு நாடாவைக் கொண்ட அரசு இந்திய அரசாகும்.  இதை மோடி எப்படிச் சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...